Saturday, December 2, 2017

மாயா-83
அப்படி
ஒன்று எளிதானதல்ல
நீ இல்லாத வாழ்க்கையை
நகர்த்துவது

சக்கரத்தில் நசுங்கிய
எலுமிச்சை பழமென
வெடித்துக்கிடக்கிறேன் நான்

தண்ணீருக்குள் குறி பார்த்து வீசும் கோல்
தண்ணீரைத் தொட்டதும்
திசைமாறி போவது போல்
எந்த சொற்களுக்கும் என்
மனம் செவி சாய்ப்பதில்லை

உன் நினைவுக்குள் முழ்கி
மிதவையென மிதக்க
அதிகாரங்கள் காலடி கிடக்கின்றன

திரும்ப திரும்ப
ஒரே தவறை செய்வதாகவும்
திரும்ப திரும்ப ஒரே வார்த்தையையே சொல்லுவதாகவும்
என் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன

கோடைகாலத்திற்குப்பின்
வரும்
வடகிழக்கு பருவமழைக்கு காத்திருக்கும் வேரென
உன் நினைவுபூமிக்குள்
புதைந்துகிடக்கிறேன்
மாயா

No comments:

Post a Comment