Saturday, December 2, 2017

மாயா-84
இந்த ஆண்டிற்குள்
எட்டாவது முறையாக
ஆவி பறக்கும்
தேநீர் நிரம்பிய குவளைகளை  கைகளில்
ஏந்தி
பந்தங்கள் சூழ பதற்றம்
நெருப்பென படர
நிற்கிறேன்

பஞ்சுமிட்டாய் சேலை உடுத்தி
தலையெல்லாம் மறைய
மல்லிக்கை பூக்கள் சூடி
அக்கம்பக்கம் நகைகளை
கடன் வாங்கி அணிந்து
நீ தான் வருகிறாயென
இரவெல்லாம் கனவுகளில்
என்னை இழந்து போகிறேன்

அலங்கரிக்கப்பட்ட பொம்மையென நின்று
ஏமாற்றும் மிஞ்சும் போது
கண்களில் குளம் தேங்குகிறது

பொய்யாக நின்று
பொய்யாக சிரித்து
பொய்யாக பேசி
பொய்யாக அலங்காரம் செய்து
பொய்யாக வெட்கப்பட்டு
பொய்யாக பதில் சொல்லி
திரும்ப திரும்ப
ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறேன்
பெண் பார்க்கும் நாடகத்தில்

போன முறை பொங்கலுக்கு நீ வந்த பொழுது
வீட்டின் தோட்டத்தில் நிலவு சாட்சியாக
என் உதட்டில் சமைத்த பொங்கல் இன்னும் இனிக்குதுதடா

உனக்காக ஜென்மம் காத்திருப்பேன்

No comments:

Post a Comment