Monday, December 4, 2017

மாயா-63
தார்ச்சாலையில் இருந்து
சற்று
கீழறங்கி மண் பாதையில்
உன் நினைப்பில்
நடந்து போகிறேன்

 புற்களின் முகத்தில்
முத்தென தளும்பி நிற்கிறது
சற்றுமுன் பெய்த
மழையின் இசைகோர்வை

உள்ளங்காலில் நனைந்த
ஈரம்
மனதுக்குள் தேநீர் வாசம்
பூப்பெய்துகிறது

சிந்தனைக்குள் முழ்கி
நான்
பாதசாரியாக பயணிக்கிறேன்

பல கிளைகள் கொண்ட
மரத்தின் இலைகளில்
நின்ற
பூமிக்குள் விழாத
மழைத்திவலை
என் உதட்டின் நடுவில்
உன் முத்தமென விழுகிறது

மரக்கிளைகளில் தங்கிய
நீரினை தேடி
பறக்கிறேன்
நானொரு பகல்பறவையாகிறேன்
மாயா

No comments:

Post a Comment