Saturday, December 2, 2017

மாயா-60
பெருத்த மலைபாம்பென
நீண்டுகிடக்கும்
உன் வீட்டின் மதில் மேல்
சிறுகுருவியென
அமருகிறேன்

கண்ணாடிசுவர்களால்
எழுப்பட்ட
பல அடுக்கு அறைகள் கொண்ட உனது வாழ்விடம்
தேடி வந்திருக்கிறேன்

தண்ணீரில் மிதக்கும்
ஆகாயமென
உன் உருவம்-எனக்கான
முத்தமொன்னை
பறக்க எத்தனிக்கிறாய்

 வைரங்களென ஜொலிக்கும் கண்ணாடி சுவரி்ல் மோதிய
முத்தம் தானியங்களாக
என்னிடம் தஞ்சம் அடைகின்றன

நீர் வழிந்தோடும்
ஆற்றோர வயற்காட்டில்
முத்தப்பூக்களை நடவு
செய்கிறேன்

தனக்கான வண்ணங்களை சேகரித்து கொள்கின்றன வண்ணப்பூச்சிகள்

உன்
முத்தப்பூவின் சூடிச்செல்லும் ஆறு பருவமெய்தி பெண்ணின் முகமென ஒளிருகின்றது
மாயா

No comments:

Post a Comment