மாயா-82
அதிக அளவு நீர் பிடிக்கும்
அண்டாவில்
கழுத்தளவு தண்ணீரை நிரப்பி
வண்ணகலர் பொடி தூவி
முழங்கையையால்
நுரைப்பொங்கி வழியும் வரை கலக்கிய பின்
அவ்வாடையை
இரண்டுமணி காலவெளியளவில் ஊற வைத்து காத்திருத்தலுக்குப்பின்
விரிந்த கல்லின் மீது
நையப்புடைத்து
ஒரு முறைக்கு இருமுறையாக தூய நன்னீரில் அலசி அலசி
நண்பகல் வெயிலில் ஈரம் காய வாட்டி வதங்கிய பின்
சாயங்காலத்தின் முன்
முகர்ந்து பார்க்கிறேன்
நீ
வெள்ளைச்சட்டையோடு
அழுத்தி நெஞ்சில் பதிந்த
முத்தத்தின் வாசனை
அப்படியே மணந்த்து
மாயா
அதிக அளவு நீர் பிடிக்கும்
அண்டாவில்
கழுத்தளவு தண்ணீரை நிரப்பி
வண்ணகலர் பொடி தூவி
முழங்கையையால்
நுரைப்பொங்கி வழியும் வரை கலக்கிய பின்
அவ்வாடையை
இரண்டுமணி காலவெளியளவில் ஊற வைத்து காத்திருத்தலுக்குப்பின்
விரிந்த கல்லின் மீது
நையப்புடைத்து
ஒரு முறைக்கு இருமுறையாக தூய நன்னீரில் அலசி அலசி
நண்பகல் வெயிலில் ஈரம் காய வாட்டி வதங்கிய பின்
சாயங்காலத்தின் முன்
முகர்ந்து பார்க்கிறேன்
நீ
வெள்ளைச்சட்டையோடு
அழுத்தி நெஞ்சில் பதிந்த
முத்தத்தின் வாசனை
அப்படியே மணந்த்து
மாயா
No comments:
Post a Comment