Friday, December 29, 2017

கூடு

பழுத்த இலைகள் உதிரா அம்மரத்தின் கிளையின் நுனியில் தூக்கணாங்குருவியின் கூடொன்று காற்று வீசும் நாலாத் திசைதோறும் அலைந்து கொண்டிருந்தது தாய்க்குருவி இல்லா அக்கூட்டில் பயத்தின் காரணமாக பதட்டத்தின்காரணமாக பாதுகாப்பு இன்மை காரணமாக குஞ்சுகளின் இரைச்சல் வழக்கத்தை விடக்கூடுதலாக இருந்தது என் ஆழ்மனம் தாய்க்குருவியின் சிறகுகளாகப் படபடத்துக் கிடக்கிறது வழிப்போக்கர்களின் கல்லும் ஒரு கண்ணும் கூட்டை பதம் பார்க்கின்றன அவசரம் ஒரு பேயாய் அறைந்து தள்ளுகிறது குஞ்சுகளின் இரைச்சல் குறைந்து கொண்டபொழுது என் வீட்டை அடைந்திருந்தேன் நாளை விடியட்டுமென தாய்க்குருவி வந்திருக்க வேண்டுமென என் பேராசை மூச்சுக்காற்றால் வெந்துகொண்டிருந்த்தேன் நான் சோலைமாயவன் 29-12-2017 11.15pm

No comments:

Post a Comment