Sunday, July 24, 2016

கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுப்பேனேன்
என்அம்மாவின் நினைவுகளை
நீந்த விடுகிறாள் அப்பெண்மணி

அதிகாலை
நடைப்பயிற்சி தயாரிப்பில் வாசலில் இறங்குகிறேன்

 இப்பெருநகரத்திற்கு குடி வந்த
மூன்று மாதமாகப் பார்க்கிறேன்
நீண்ட இந்தத்தெருவினைக் கண்ணாடி அழகில்
பல ஆண்டின் அனுபவம்  இருந்தது
அப்பெண்மனிக்கு

கடந்து போகும் ஒவ்வொரு நாளும்
என்னைப் பார்த்து சிரிக்கும்
அந்த நொடியில் என் தலைக்கணம்
உடைந்து கொண்டேயிருந்தது

சீவப்படாதத்தலையும்
காதறுந்த  பொருத்தமற்ற செருப்பும்
நைந்து  கிழியாத சீலையும்
என் கவன அடுக்கில் படியத்தொடங்கின
அவங்க பிம்பத்தின் ஒரு பகுதி

இந்தக்குடியிருப்பு பகுதியில் வசிக்கிறேன்
வீதியின் அழகினை  சொல்லி மெய்ச்சிலிப்பார்கள்
அப்பொழுதெல்லாம் -அவள்
தியாகம் வணங்குவேன்

தலையில் ஈரம் சொட்ட சொட்ட
மஞ்சள் வண்ணத்தில் புதிய ஆடை
மெல்லிய மஞ்சள் பூசிய முகத்தில்
ஒரு ரூபாய் அளவில் சிகப்பு குங்கும்ப்பொட்டும்
அப்பெண்மனி
பெண் தெய்வத்தின் மீதான விரத த்தில்
தெய்வமாகச்சாயல் கொள்ள
அப்பொழுது அந்த்த்தெருவில்
வணங்கி நிற்க
மனம் அலை அலையாக துடித்தது

கையில் தாங்கி நிற்கும்
நீண்டதொரு விளக்குமாரு பார்க்கிறேன்
கடவுள் நேரில் வந்தாலும்
குப்பைக்களை அள்ளச்சொல்லும்
இச்சமூகத்தின் எச்சமாக வாழ்வதலில்
பொருளற்றுப்போகிறேன்

No comments:

Post a Comment