Friday, December 25, 2015

பூனை

என் வீட்டின் இரண்டாவது அறையில் வாசித்துக்கொண்டியிருக்கிறேன்
ஓநாய் குலச்சின்னம்

வயதிறைந்த
கண்ணுக்குள் ஒளியேந்திய வெள்ளைநிற பூனையொன்று என் பின் அறையின் கதவின் வழியாக உள்நுழைந்து சமையலறையில் துழாவி
ஒன்றுமில்லாத அடுத்த அறையில் ஏமாந்து வரவேற்பறையில் வெளியேறும் பொழுதில் கவனித்தேன்

திறந்தே கிடக்கின்றன
பின் வாசல்கதவுகள்

அதை
இரண்டொரு முறை
பார்த்திருக்கிறேன்
கதவுகளை
இறுக்கமாகப் பூட்டு்க்கின்ற நிமிடத்தில்

கற்றோடு கொசுவும்
உள்ளே வரமால் இருப்பதற்குச் சாத்தப்பட்ட
ஜன்னல்களைக்கவனிக்கிறேன்

என்
வீட்டில் பூனையென்பது
அதிசயமாகப் பார்க்கிறேன்
பதட்டமில்லாமல்
தாய்மை அடைந்த ஒரு புலியென
நடந்த லாவகத்தில்
மெய் சிலிர்த்தே  போனேன்

அதன் கண்களில்
கருணை வழிந்த படி
மியாவ் மியாவ் என்ற
அதன் குரலில்
என்
அம்மாவைக்கண்டேன்
இணைந்து சிரிக்கிறார்
என்அப்பா

தாய்மையடைந்திருக்கும்
அப்பூனையின் வருகைக்காக திறந்துகிடக்கின்றன
ஜன்னல்கள்
இப்போது
தட்டில் நிறைத்த பாலுடன்.

No comments:

Post a Comment