Friday, October 2, 2015

குளம்

தார்ச்சாலையின் 
பக்கத்தில் தான்
இருக்கிறது
 இந்தக் குளம்
 இருசக்கர வாகனத்தில் முன்னே
அமர்ந்திருந்த மகன்
கேட்டுவிட்டான்
குளத்தின் நடுவில்.
பூத்திருந்த தாமரைப் பூக்களில் ஒன்றினை
என் முப்பதாண் வாழ்வின்  ஒரு முறையேனும்
பறித்ததும் இறங்கியதும் இல்லை
இந்தக் குளத்தில்..என்னைத்
தடுத்தது யார்? 
என் அப்பனிடம்
கேட்டதே இல்லை.
தாகம் முற்றியவாறு
பல முறை
கடக்க நேரிட நீர்
அருந்தத் தோணவில்லை
அதிகாலைக் குடிநீர்க்காக
குடங்களை சுமந்து
அலையும் அம்மா
குளங்களை
மறந்தது எப்படி?
இன்னும்
தார்ச்சாலைப் பக்கத்தில்
இந்தக் குளம் இருக்கிறது
⁠⁠⁠⁠



இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

No comments:

Post a Comment